கோவை மத்திய சிறையில் பழுதடைந்த அர்மதா ஜீப் பொது ஏலம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை மத்திய சிறையில் உள்ள பழுதடைந்த அர்மதா ஜீப் ஆகஸ்ட் 12ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க ரூ.2,000 டெபாசிட் தேவை. ஆகஸ்ட் 11 வரை வாகனத்தை பார்வையிடலாம்.


கோவை: கோவை மத்திய சிறையில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த அர்மதா ஜீப் வாகனம் பழுதடைந்து, கழிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்த வாகனத்திற்கான பொது ஏலம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

பழுதடைந்த அர்மதா ஜீப் வாகனத்தின் பதிவு எண் TN 01 G-0722 ஆகும். இந்த வாகனத்திற்கான பொது ஏலம் கோவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும்.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ.2,000 தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். மேலும், வாகனத்தை பார்வையிட விரும்புவோர் ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணி வரை அலுவலக வேலை நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் சிறை வளாகத்திற்கு நேரில் வந்து பார்வையிடலாம் என்றும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...