பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றக் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் "என்ன ஜாதி" என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலை வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...