பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன் புதூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு

பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் அணைக்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தரைமட்ட பாலம் ஆற்றில் மூழ்கியது.



இதனால் அப்பகுதியில் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, செல்ஃபி மோகத்தால் பொதுமக்கள் பலர் ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை உணராமல் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...