கோவையில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

கோவை மாநகராட்சி 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த இடம் 2007ல் தனிநபருக்கு விற்கப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட கிருஷ்ணா நகரில், 16 சென்ட் நிலம் பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2007ஆம் ஆண்டு இந்த இடம் வரன்முறை செய்யப்பட்டு தனிநபருக்கு விற்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து 2019ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரருக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் நேரடி விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி கிருஷ்ணா நகர் பகுதிக்குச் சென்று, பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் இருந்த இரும்புத் தகடுகள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. பின்னர், "இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...