பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவருக்கு கோவை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள், தனது பாட்டியுடன் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, இ.பி.நகரில் உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான முருகன் (78) வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டின் முதல் மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, நீதிபதி ஜி.குலசேகரன் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சமும், அபராதத் தொகையான ரூ.10,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...