இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதியன்று (இன்று) உலக புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக புவி தினத்தை முன்னிட்டு புவியின் மகிமையினை போற்றும் வகையில் உலகம் முழுவதும் 500 இடங்களில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கோவையிலேயே மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியினை ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் மற்றும் ராக் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பங்கேற்று பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் சாரதா கூறுகையில், விஞ்ஞானம் மூலமாகவே இவ்வுலகில் பல செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞானம் குறித்து பல்வேறு மன நிலைகள் உள்ளது. இதில் தவறான மனநிலைகளை உடனடியாக தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில் நடக்கவுள்ள தீமைகளை தடுத்து உலகை காக்கும் சக்தி அறிவியல் விஞ்ஞானத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்" என்றார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் என்னைச் சந்தித்து அனுமதி கோரினர். அவர்கள் எனக்கு இதுகுறித்தான முழுத் தகவலையும் தெரிவித்தனர். 



விளையாட்டு, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு என்று மாணவர்கள் தங்களது சுயநலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் இந்த மாணவர்கள் சமூகநல அக்கறையுடன் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அதனாலேயே உடனடியாக அனுமதியளித்தேன். 



இன்று மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் நாம் புவி தினத்தை கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த உலகை அழகான முறையில் விட்டுச் செல்ல வேண்டும். இவ்வுலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமாகவும், அழிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணியில் கல்லூரி முதல் சிறுவயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று புவியினை போற்றும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...