இரிடியம் ஏற்றுமதி பெயரில் மோசடி: கணவன் மனைவி கைது

கோவையில் இரிடியம் ஏற்றுமதி பெயரில் ரூ.25 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.4.99 லட்சம் பணம், 77 கிராம் தங்க நகைகள் அடங்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரிடியம் ஏற்றுமதி பெயரில் நடந்த பெரிய மோசடி வழக்கில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசனுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் அறிமுகமானார். சியாமும் அவரது மனைவி சஜிதாவும் தங்களிடம் விலைமதிப்பற்ற இரிடியம் இருப்பதாகவும், அதை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்றும் கூறி சீனிவாசனை நம்ப வைத்தனர்.



இரிடியத்தை சோதனை செய்ய Y.G.சேகர் என்பவரை அறிமுகப்படுத்தி, சீனிவாசனிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றனர். பின்னர், வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறிய வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர் இரிடியத்தை உண்மையானது என்று உறுதிப்படுத்தி, வெளிநாட்டில் விற்பதற்காக மேலும் ரூ.15 லட்சம் பெற்றனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த சீனிவாசன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமரேசன் நாடார் மகன் சியாம் (எ) ஜாய் மோகன் (44) மற்றும் அவரது மனைவி சஜிதா (38) ஆகியோர் ஜூலை 31 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரிடியம், ரூ.4,99,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 77 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...