பொள்ளாச்சியில் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது - எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் கனமழையால் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அருகிலுள்ள வீடுகள் சிறிய சேதம் அடைந்தன. எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சுவர்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்து வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இன்று மாலை இடிந்து விழுந்தது. இதனால் அருகிலுள்ள வீடுகளும் சிறிய அளவில் சேதமடைந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாடன் ரைஸ் மில் அதிகாரிகளை சந்தித்து, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்களை உடனடியாக சரி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...