கோவை வனக்கல்லூரியில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கருத்தரங்கம்

கோவை வனக்கல்லூரியில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய-ஜப்பானிய கூட்டுறவு, வனத்துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை வனக்கல்லூரி வளாகத்தில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உள்ள ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் இந்திய அலுவலக மேம்பாட்டுப் பிரிவு நிபுணர் சித்தார்த் பரமேஸ்வரன் பங்கேற்றார்.


சித்தார்த் பரமேஸ்வரன் தனது உரையில், தமிழகத்தில் காடுகள் வளர்ப்புத் திட்டம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நான்கு கட்டங்களாக நிதியுதவி செய்து வருவதாகக் கூறினார். மேலும், தனியார் நிலங்களில் சுமார் 1.43 லட்சம் ஹெக்டேரில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய-ஜப்பானிய ஆராய்ச்சி மையங்கள் இணைந்து செயல்படுவது இரு நாட்டு உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தமிழக அரசின் வனத்துறை செயலர் செந்தில்குமார், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும், வனத்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதைக் குறித்தும் விளக்கினார்.


மனித-விலங்கு மோதல் குறித்த ஆய்வு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கோர் எர்த் டிரஸ்ட் அமைப்பின் கள அலுவலர் தானீஷ் பாஸ்கர் உரையாற்றினார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் நிஷாந்த் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு மனித-விலங்கு மோதல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர்.


இக்கருத்தரங்கில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் முதுநிலை நிர்வாகி வகாமட்சு இஜி, தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனக் காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை சிறப்பு படைப் பிரிவு) சுதான்சு குப்தா, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற இயக்கத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கம் ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...