கோவையில் வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 24 வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 30 அன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. சரவணக்குமார் - கோவை தெற்கு வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியராக நியமனம்.

2. கிருஷ்ணவேணி - கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியராக நியமனம்.

3. வி.குமரி அனந்தன் - கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து அன்னூர் வருவாய் வட்டாட்சியராக மாற்றம்.

4. கல்பனா அலமேலு - ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைத் திட்டம் (பொள்ளாச்சி அலகு) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியராக நியமனம்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்வதோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்துவதோ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட வட்டங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் பணியாற்றி வந்த 24 வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் மாவட்டத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...