கோவையில் வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 24 வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 30 அன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. சரவணக்குமார் - கோவை தெற்கு வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியராக நியமனம்.

2. கிருஷ்ணவேணி - கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியராக நியமனம்.

3. வி.குமரி அனந்தன் - கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து அன்னூர் வருவாய் வட்டாட்சியராக மாற்றம்.

4. கல்பனா அலமேலு - ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைத் திட்டம் (பொள்ளாச்சி அலகு) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியராக நியமனம்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்வதோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்துவதோ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட வட்டங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் பணியாற்றி வந்த 24 வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் மாவட்டத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...