உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்த பசுமை தேசம்


இன்று உலக புவி தினத்தினை முன்னிட்டு கோவை பசுமை தேசம் சார்பில் மரக்கன்று நடும் விழா கொண்டாட்டப்பட்டது.



கோவையில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் சுமார் 6 அடி உயரமுள்ள இரண்டு வேப்பமரங்கள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற பசுமைதேசம் நிறுவனர் ராஜேந்தர் கூறுகையில், உலக புவி தினத்தை முன்னிட்டு புவியினையும், உயிரினங்களையும் பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



அதன்படி, இவ்வான்று மதுக்கரை சாலை, சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு இரண்டு வேப்ப மரக்கன்று நடப்பட்டது. இவை 6 அடி உயரம் கொண்டவை. ஏனெனில், வெயில் காலத்தில் சிறியளவிலான மரக்கன்றுகளை நட்டினால் அவை போதிய நீரின்மையாலும், வெப்பத்தினாலும் வாடிவிடும். எனவே தான் வளச்சியடைந்த வேப்பமரக் கன்று நடப்பட்டுள்ளது" என்றார்.



இந்நிகழ்வின் போது, பசுமை தேசம் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...