கோவை சுங்கம் பைபாஸில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த லாரி ஓட்டுநர் கைது

கோவை சுங்கம் பைபாஸில் போலீஸ் வாகன சோதனையின் போது, குடிபோதையில் வந்த லாரி ஓட்டுநர் முகமது நஸ்ருதீன் போலீசாருடன் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஜூலை 29 அன்று நடந்தது.


கோவை: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே ஜூலை 29 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.

இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...