உடுமலை அருகே கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது: 4.5 கிலோ இறைச்சி பறிமுதல்

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் 4.5 கிலோ கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். சம்பவம் ஜம்புக்கல்கரடு பகுதியில் நடந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்களிடமிருந்து 4.5 கிலோ கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு கூட்டு புலனாய்வில் ஈடுபட்டிருந்த போது, ஜம்புக்கல்கரடு பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக செயல்பட்ட வனத்துறையினர், ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் சுற்றித் திரிந்த 5 நபர்களை பிடித்து உடுமலை வனச்சரகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மலையாண்டிகவுண்டனூரை சேர்ந்த பிரபு (24), பரதராமன் (43), பெருமாள்புதூரை சேர்ந்த சதீஷ் (27), எலையமுத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (24), வசந்தகுமார் (25) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஜம்புக்கல்கரடு மலைப்பகுதியில் கண்ணி வைத்து கடமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 4.5 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...