மடத்துக்குளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அவதி: அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திட்டமிடல் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அடிப்படை வசதிகள் இன்மையும், போக்குவரத்து நெரிசலும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் மடத்துக்குளம் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரின் சரியான திட்டமிடல் இல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், துங்காவியில் இருந்து கோட்டமங்கலம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்வுக்கு வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், விபரம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு டோக்கன் வழங்கினார். மேலும், உடுமலை பகுதியில் இருந்து தேவையான கூடுதல் இ-சேவை மையங்களை துங்காவி கிராமத்திற்குக் கொண்டு வந்தார்.



இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக அளவிலான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். ஆனால், அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான துறை அதிகாரிகள் வராததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...