மடத்துக்குளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அவதி: அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திட்டமிடல் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அடிப்படை வசதிகள் இன்மையும், போக்குவரத்து நெரிசலும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் மடத்துக்குளம் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரின் சரியான திட்டமிடல் இல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், துங்காவியில் இருந்து கோட்டமங்கலம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்வுக்கு வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், விபரம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு டோக்கன் வழங்கினார். மேலும், உடுமலை பகுதியில் இருந்து தேவையான கூடுதல் இ-சேவை மையங்களை துங்காவி கிராமத்திற்குக் கொண்டு வந்தார்.



இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக அளவிலான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். ஆனால், அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான துறை அதிகாரிகள் வராததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...