பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணி தீவிரம்

பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்றிரவு 9 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டி நிரம்பியது. ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக அணை நிரம்பி உள்ளது.



பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.



இதனால் பவானிக் கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசலில் பயணிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஜூலை 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு கோவிலின் படித்துறை மற்றும் கரையோர பகுதிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாநில பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...