கோவை மாவட்டத்தில் சராசரியாக 68.50 மி.மீ மழை பதிவு: பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை

கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 68.50 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. சின்னக்கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 239 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மை துறை இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் சராசரியாக 68.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவுகள் பின்வருமாறு: வேளாண் பல்கலைக்கழகம் - 15.60 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் - 2 மி.மீ, மேட்டுப்பாளையம் - 21 மி.மீ, பில்லூர் அணை - 13 மி.மீ, அன்னூர் - 1.40 மி.மீ, கோவை தெற்கு - 5.60 மி.மீ, சூலூர் - 9 மி.மீ, வாரப்பட்டி - 6 மி.மீ, தொண்டாமுத்தூர் - 48 மி.மீ, சிறுவாணி அடிவாரம் - 85 மி.மீ.

மேலும், மதுக்கரை தாலுக்கா - 17 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் - 15 மி.மீ, பொள்ளாச்சி தாலுக்கா - 84 மி.மீ, மாக்கினாம்பட்டி - 19 மி.மீ, கிணத்துக்கடவு - 19 மி.மீ, ஆனைமலை - 38 மி.மீ, ஆழியார் - 61 மி.மீ ஆகிய பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், மலைப்பகுதிகளான சின்கோனா - 232 மி.மீ, சின்னக்கல்லாறு - 239 மி.மீ, வால்பாறை பிஏபி - 194 மி.மீ, வால்பாறை தாலுக்கா - 192 மி.மீ, சோலையாறு - 185 மி.மீ என அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இவற்றில் சின்னக்கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 239 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...