நீலிகோணாம்பாளையம் அருகே இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இருவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையம் அருகே, முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இரு நபர்கள் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தராஜின் மகன் கார்த்திகேயன் (18), அப்பகுதியில் உள்ள சரோஜினி ரோட்டில் இருமொழி வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கார்த்திகேயனுக்கும் சிபு (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 26 அன்று கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிபு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திகேயனை தாக்கியவர்கள் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்த சிபு (30) மற்றும் நீலிகோணாம்பாளையத்தைச் சேர்ந்த ரெஷித் (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இருவரையும் ஜூலை 28 அன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...