நீலிகோணாம்பாளையம் அருகே இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இருவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையம் அருகே, முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இரு நபர்கள் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தராஜின் மகன் கார்த்திகேயன் (18), அப்பகுதியில் உள்ள சரோஜினி ரோட்டில் இருமொழி வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கார்த்திகேயனுக்கும் சிபு (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 26 அன்று கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிபு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திகேயனை தாக்கியவர்கள் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்த சிபு (30) மற்றும் நீலிகோணாம்பாளையத்தைச் சேர்ந்த ரெஷித் (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இருவரையும் ஜூலை 28 அன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...