உடுமலையில் தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மானியத் திட்டங்களின் தாமதம் குறித்து விவசாயிகள் கோபம் தெரிவித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த சில மாதங்களாக தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் விவசாயிகளை சென்றடையவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.



பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை வாடல் நோய் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், விவசாயிகள் பயிர் பாதிப்பு குறித்து புகார் அளித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை என்றும் கூறினர். எனவே, விவசாயிகள் பாதிப்பு குறித்து தெரிவித்தால், தோட்டக்கலை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

உடுமலையில் நடைபெற்ற தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிராக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...