உடுமலையில் தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மானியத் திட்டங்களின் தாமதம் குறித்து விவசாயிகள் கோபம் தெரிவித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த சில மாதங்களாக தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் விவசாயிகளை சென்றடையவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.



பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை வாடல் நோய் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், விவசாயிகள் பயிர் பாதிப்பு குறித்து புகார் அளித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை என்றும் கூறினர். எனவே, விவசாயிகள் பாதிப்பு குறித்து தெரிவித்தால், தோட்டக்கலை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

உடுமலையில் நடைபெற்ற தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிராக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...