கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச இணை சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை இராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இலவச இணை சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை இராமநாதபுரம், பெருமாள் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வெற்றிச்செல்வன், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் அம்பிகா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி துணை ஆணையர் மரு.ச.செல்வசுரபி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த இலவச இணை சீருடை வழங்கும் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...