மீன் பிடிக்க அனுமதி கோரி வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர்கள்

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதி மீனவர்கள் வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்.

மீனவர்கள் தங்கள் மனுவில், பல ஆண்டுகளாக கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்களாக மீன்பிடித்து வருவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குத்தகை உரிமை முடிந்தவுடன் அனைத்து மீனவர்களும் சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் மீன் பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



தற்போதைய கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலமுருகன், சில மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட சில குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தர மறுப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக் குளங்களில் மீன்பிடிக்க சென்றால் பாலமுருகன் தங்களை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பெரும்பான்மையான மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் கோவை வட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...