கோவையில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய 5 பேர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தரணீதரன் (23) என்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் நேற்று (ஜூலை 27) ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அந்த 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். காயமடைந்த தரணீதரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...