கோவை கார் பந்தயத்தில் கேரள மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பில் கேரள மருத்துவர் பிரேம்லால் மாரடைப்பால் உயிரிழந்தார். பந்தயத்தின் போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே ஜூலை 27 அன்று தொடங்கின. இப்போட்டியில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) பங்கேற்றார்.

போட்டியின் போது, மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேர சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கி வரும் பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேம்லால் செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக மருத்துவர் ரிஷிகேஷுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றார். கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேம்லால், பல முக்கிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் அனிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் பிரேம்லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அனைவரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்லாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...