உடுமலையில் வனத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்: வன ஊழியர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆலோசனைப்படியும், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா முன்னிலையிலும் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில், வனப் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண், பல் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொது மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர் உட்பட 5க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.



உடுமலை வனச்சரகர் மணிகண்டன், மருத்துவர்கள் மற்றும் உடுமலை, திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள வன ஊழியர்கள், வனக்காப்பாளர்கள் பலரும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வனத்துறை ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் உதவியது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...