கோவை செல்வபுரத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

கோவை செல்வபுரத்தில் தள்ளுவண்டி வியாபாரி முகமது கரீமை கத்தி முனையில் மிரட்டி தாக்கி ரூ.500 பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 27 அன்று நடந்தது.


Coimbatore: கோவை செல்வபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த முகமது கரீம் (55) என்பவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 27 அன்று செல்வபுரம் இந்திராநகர் செல்வ விநாயகர் கோயில் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் ரூ.1000 கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

முகமது கரீம் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த மூவரும் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து முகமது கரீம் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தெலுங்குபாளையம் உடையார் தெருவை சேர்ந்த கார்த்திகை செல்வம் (27), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அர்ஜூன் (23), கல்லா மேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் என கண்டறிந்தனர்.

இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...