கோவை செல்வபுரத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

கோவை செல்வபுரத்தில் தள்ளுவண்டி வியாபாரி முகமது கரீமை கத்தி முனையில் மிரட்டி தாக்கி ரூ.500 பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 27 அன்று நடந்தது.


Coimbatore: கோவை செல்வபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த முகமது கரீம் (55) என்பவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 27 அன்று செல்வபுரம் இந்திராநகர் செல்வ விநாயகர் கோயில் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் ரூ.1000 கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

முகமது கரீம் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த மூவரும் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து முகமது கரீம் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தெலுங்குபாளையம் உடையார் தெருவை சேர்ந்த கார்த்திகை செல்வம் (27), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அர்ஜூன் (23), கல்லா மேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் என கண்டறிந்தனர்.

இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...