ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

கோவையில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை நகரத்தில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விவரம் வருமாறு:

சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திராகாந்தி. இவரது உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா. இவர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து உள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக கொடுத்து உள்ளனர்.

ஆனால், இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் அண்மையில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் நேற்று ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரும் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. ரஞ்சனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான கவிப்பிரியா, தான் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...