ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

கோவையில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை நகரத்தில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விவரம் வருமாறு:

சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திராகாந்தி. இவரது உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா. இவர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து உள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக கொடுத்து உள்ளனர்.

ஆனால், இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் அண்மையில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் நேற்று ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரும் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. ரஞ்சனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான கவிப்பிரியா, தான் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...