கோவையில் டிஜிட்டல் டீடாக்ஸ் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 கிலோமீட்டர் தூரம் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் இருந்து துவங்கி, ஆர்.எஸ்புரம் மற்றும் வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital Detox) குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

இந்த வாக்கத்தானில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த வாக்கத்தானின் நோக்கமாகும்.

தற்போது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் பெரும் அளவில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் சாதனங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு மன உளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டிஜிட்டல் சாதனங்களை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...