அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், பொன்னாபுரம் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தனது உரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை, மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.



மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிகாந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...