அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், பொன்னாபுரம் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தனது உரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை, மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.



மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிகாந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...