அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், பொன்னாபுரம் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தனது உரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை, மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.



மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிகாந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...