இஸ்லாம் குறித்து அறிய கிருஸ்தவ பாதிரியார்கள் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை

கோவையில் உள்ள நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்ற கிருஸ்தவ பாதிரியார்கள் சர்வ சமய நம்பிக்கைகளை அறிந்துகொள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர். இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்டு தெளிவடைந்தனர்.


கோவை: கோவை நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்று நாடெங்கும் பாதிரியார்களாக தேர்வாகியுள்ள கிருஸ்தவ பாதிரிமார்கள், சர்வ சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள கோவையில் உள்ள வணக்கஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று (26 ஜூலை 2024) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர்.



நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ஹுதா பள்ளிவாசல் இமாம் மௌலவி ரியாஸுதீன் அஸ்ஹரி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.



நிகழ்வில் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு தெளிவடைந்தனர். கேள்விகளுக்கு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பதிலளித்தார்கள்.



இந்நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகரச் செயலாளர் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அமீரே மகாமிகள் பீர் முஹம்மது, முஹம்மது பஷீர் ஆகியோரும் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.



மேலும் ஜமாஅத்தின் ஊழியர்கள், உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...