கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை உரையாற்றினார்.



கார்கில் போரில் பங்கு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கார்கில் போர் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகம் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கு நாட்டின் முப்படையில் உள்ள படைப்பிரிவுகள் குறித்தும், இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், Lt.Col. ஆர்.வி.கிரி அவர்களுக்கு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கந்தப்பன், கூட்டுறவுத்துறை தலைவர் முனைவர் வில்சன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யுவராஜ், பேராசிரியர்கள் பிரகாஷ், கோவிந்தராஜ், சௌந்தர்ராஜ், நந்தகுமார் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 25வது ஆண்டு நினைவு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...