கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை உரையாற்றினார்.



கார்கில் போரில் பங்கு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கார்கில் போர் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகம் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கு நாட்டின் முப்படையில் உள்ள படைப்பிரிவுகள் குறித்தும், இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், Lt.Col. ஆர்.வி.கிரி அவர்களுக்கு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கந்தப்பன், கூட்டுறவுத்துறை தலைவர் முனைவர் வில்சன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யுவராஜ், பேராசிரியர்கள் பிரகாஷ், கோவிந்தராஜ், சௌந்தர்ராஜ், நந்தகுமார் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 25வது ஆண்டு நினைவு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...