ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வு மற்றும் மக்களை ஏமாற்றும் திட்டம் என குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், "திராவிட மாடல் அரசு இலவச வீடு திட்டம் போல ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், இத்திட்டத்தில் ஒரு சதுர அடிக்கான அனுமதி கட்டணம் ₹44லிருந்து ₹88 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை சிதைக்கும் செயல் என்றும் கூறினார்.



அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மேலும் தொடர்ந்து, "இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தர்ணா போராட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...