கோவை மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.


Coimbatore: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஜூலை 25-ம் தேதி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதாகவும், மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் மோதல் போக்குடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக கூறி, கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில், காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...