காங்கேயம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நிழலி கிராமத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் பொருத்தமற்றது என்று கூறி 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நிழலி கிராமத்தில், கடந்த 4 வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் இருந்த தமிழக அரசு, 5 மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கியது. ஆனால், வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை ஆய்வு செய்வதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிழலி ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளகாளிபாளையம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் இல்லாத நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கோரி போராடி வந்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் 8 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இலவச பட்டா வழங்கியது.

ஆனால், பட்டா வழங்கி 5 மாதங்கள் கடந்தும் இடம் ஒதுக்கப்படவில்லை. தற்போது ஒதுக்கப்பட்ட இடம் பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதியற்றது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் விரும்பாத இடத்தில் வீடு கட்ட நிதி ஒதுக்கியதாக கூறி மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...