கோட்டூர் ரெயின்போ காலனி அருகே குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய பள்ளி வாகனம்

கோட்டூரில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி வாகனம் இறங்கியது. பொதுமக்கள் உதவியுடன் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சியில் 2.0 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோட்டூர் ரெயின்போ காலனி அருகே இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் பள்ளி வாகனம் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கோட்டூர் பேரூராட்சியின் 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 25 ஆம் தேதி காலை, கோட்டூர் ரெயின்போ காலனி அருகே ஆர்.கே.ஆர் ஞானோதயா மேல்நிலைப்பள்ளியின் வாகனம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தில் திரும்பும்போது, குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனத்தின் பின் சக்கரம் மாட்டி, இடது புறமாக சாய்ந்தது.

இச்சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் பயத்துடன் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பள்ளி வாகனமும் குழியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...