பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: பொள்ளாச்சியில் கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு பொள்ளாச்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பிரிவில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், கோவை தெற்கு மாவட்டப் பகுதிகளில் பாமகவை வலுப்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்களான வாணி ஆறுமுகம், என்.எம். ராமு, தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், அஷ்ரப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...