கோவை ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ரமணீஸ் மயூரியில் இரண்டு மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம். பணியை விரைவில் முடிக்க கோரிக்கை.


Coimbatore: கோயம்புத்தூர் துடியலூர் சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணி இரண்டு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பைப் புதைக்கப்பட்டு பள்ளங்கள் சரியாக மூடப்படாத நிலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பள்ளங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நடந்து செல்பவர்களும் மழை நீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் ரமணீஸ் மயூரி பகுதி பொதுமக்கள் இன்று (ஜூலை 25) கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பணி முடியும் வரை தற்காலிக நடவடிக்கையாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...