கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை முயற்சி: இருவருக்கு ரூ.60,000 அபராதம்

கோவை மாங்கரை அருகே வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்க முயன்ற இரண்டு நபர்களுக்கு வனத்துறை ரூ.60,000 அபராதம் விதித்தது. 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாங்கரை அருகே, ஆனைகட்டி - கோவை சாலையில் வாகனம் மோதி காட்டுப்பன்றி ஒன்று நேற்று (ஜூலை 24) உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்த தடாகம் குட்டவெளியைச் சேர்ந்த மருதாசலம் மற்றும் ரங்கநாதன் ஆகியோர், இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று அதனை வெட்டி கூறு போட்டனர். பின்னர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர்.

இதனைக் கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள், இவ்விருவரையும் பிடித்து கோவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக வனவிலங்கு இறைச்சியை விற்க முயன்றதற்காக இருவருக்கும் தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வது ஆகியவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...