கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை முயற்சி: இருவருக்கு ரூ.60,000 அபராதம்

கோவை மாங்கரை அருகே வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்க முயன்ற இரண்டு நபர்களுக்கு வனத்துறை ரூ.60,000 அபராதம் விதித்தது. 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாங்கரை அருகே, ஆனைகட்டி - கோவை சாலையில் வாகனம் மோதி காட்டுப்பன்றி ஒன்று நேற்று (ஜூலை 24) உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்த தடாகம் குட்டவெளியைச் சேர்ந்த மருதாசலம் மற்றும் ரங்கநாதன் ஆகியோர், இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று அதனை வெட்டி கூறு போட்டனர். பின்னர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர்.

இதனைக் கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள், இவ்விருவரையும் பிடித்து கோவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக வனவிலங்கு இறைச்சியை விற்க முயன்றதற்காக இருவருக்கும் தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வது ஆகியவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...