பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலப் பணிகள் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான முக்கிய பாதையாகும். முன்னதாக இருந்த தற்காலிகப் பாலம் கடந்த ஆண்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளுக்காக கம்பிகள் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கரடுமுரடான பாதைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சிலர் விபத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜூலை 24 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...