பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலப் பணிகள் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான முக்கிய பாதையாகும். முன்னதாக இருந்த தற்காலிகப் பாலம் கடந்த ஆண்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளுக்காக கம்பிகள் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கரடுமுரடான பாதைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சிலர் விபத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜூலை 24 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...