ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மது அருந்தி பலர் உயிரிழப்பதாகவும், நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



ஆனைகட்டியில் 'பிரண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் கிளப் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கூறுகையில், "கடந்த 2019ல் நாங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் 23 கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் தற்போது ஆனைகட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிளப்புகளில் விற்கப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

மேலும் அவர், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும். எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவதோ விற்பதோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும், தற்போது வழங்கப்படும் பொருட்களால் தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் முருகவேலு குற்றம்சாட்டினார்.

"தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும்" என்று முருகவேலு வலியுறுத்தினார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...