ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மது அருந்தி பலர் உயிரிழப்பதாகவும், நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



ஆனைகட்டியில் 'பிரண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் கிளப் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கூறுகையில், "கடந்த 2019ல் நாங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் 23 கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் தற்போது ஆனைகட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிளப்புகளில் விற்கப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

மேலும் அவர், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும். எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவதோ விற்பதோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும், தற்போது வழங்கப்படும் பொருட்களால் தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் முருகவேலு குற்றம்சாட்டினார்.

"தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும்" என்று முருகவேலு வலியுறுத்தினார்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...