கோவை நியூசித்தாபுதூரில் வீட்டின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளை

கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வாடகை வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி சாவித்திரி, கோவை நியூசித்தாபுதூர் கே.கே.நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் தூய்மைத் தொழிலாளராக பணிபுரியும் சாவித்திரி, திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சாவித்திரி ஜூலை 23 அன்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...