கோவை நியூசித்தாபுதூரில் வீட்டின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளை

கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வாடகை வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி சாவித்திரி, கோவை நியூசித்தாபுதூர் கே.கே.நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் தூய்மைத் தொழிலாளராக பணிபுரியும் சாவித்திரி, திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சாவித்திரி ஜூலை 23 அன்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...