கோவை-திருச்சி சாலையில் குடிநீர் மற்றும் சாக்கடை திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் குடிநீர், சாக்கடை மற்றும் IOCL பணிகளுக்கான குழாய் பதிப்பு முடிந்த பின் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் இன்று இரவு (23.07.2024) கோயம்புத்தூர்-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் 24*7 குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOCL) ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், சாலை சீரமைக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர், சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்புசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் முரளிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் முடிவடைந்ததும், சிங்காநல்லூர் பகுதி மக்களுக்கு மேம்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சாக்கடை வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...