கோவை-திருச்சி சாலையில் குடிநீர் மற்றும் சாக்கடை திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் குடிநீர், சாக்கடை மற்றும் IOCL பணிகளுக்கான குழாய் பதிப்பு முடிந்த பின் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் இன்று இரவு (23.07.2024) கோயம்புத்தூர்-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் 24*7 குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOCL) ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், சாலை சீரமைக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர், சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்புசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் முரளிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் முடிவடைந்ததும், சிங்காநல்லூர் பகுதி மக்களுக்கு மேம்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சாக்கடை வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...