கோவை-திருச்சி சாலையில் குடிநீர் மற்றும் சாக்கடை திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் குடிநீர், சாக்கடை மற்றும் IOCL பணிகளுக்கான குழாய் பதிப்பு முடிந்த பின் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் இன்று இரவு (23.07.2024) கோயம்புத்தூர்-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் 24*7 குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOCL) ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், சாலை சீரமைக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர், சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்புசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் முரளிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் முடிவடைந்ததும், சிங்காநல்லூர் பகுதி மக்களுக்கு மேம்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சாக்கடை வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...