கோவையில் போக்குவரத்து மாற்றம்: மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் மாற்றம் செய்ய உத்தேசம். மக்கள் கருத்து தெரிவிக்க காவல்துறை அழைப்பு.


கோவை: கோவை மாநகர காவல்துறை இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்களுக்கான புதிய வழித்தடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் பின்வருமாறு: காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் வழியாக சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம். இந்த சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 31, 2024க்கு முன்பாக, 0422-2212567 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவினாசி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகள் காரணமாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பொதுமக்கள் சிரமப்படுவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்களாக காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், தாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...