மத்திய பட்ஜெட் 2024-25: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் பலன் - தென்னிந்திய ஆலை உரிமையாளர்கள் சங்கம்

மத்திய பட்ஜெட் 2024-25ல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஜவுளித் துறைக்கு பெரும் பலனளிக்கும் என தென்னிந்திய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கோவை: மத்திய பட்ஜெட் 2024-25ல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஜவுளித் துறைக்கு பெரும் பலனளிக்கும் என தென்னிந்திய ஆலை உரிமையாளர்கள் சங்கம் (SIMA) தெரிவித்துள்ளது.

இது குறித்து சைமா தலைவர் டாக்டர் எஸ்.கே. சுந்தரராமன் வெளியிட்ட அறிக்கையில், "வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவை மத்திய பட்ஜெட்டின் முக்கிய கருப்பொருள்களாக உள்ளன. இந்த துறைகளுக்கான பல்வேறு அறிவிப்புகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஜவுளித் துறைக்கு பெரிதும் பயனளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அவர், இத்திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி வரை பிணை இல்லாமல் இயந்திரங்கள் வாங்குவதற்கான கால கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடி காலத்தில் வங்கிக் கடன்களைத் தொடர்ந்து பெறுவதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளதையும் அவர் வரவேற்றுள்ளார்.

ஸ்பாண்டெக்ஸ் நூல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மெத்திலீன் டைபினைல் டைசோசியனேட் (MDI) மீதான அடிப்படை சுங்க வரியை 7.5% இலிருந்து 5% ஆக குறைத்துள்ளதை சைமா தலைவர் வரவேற்றுள்ளார். இது ஜவுளி உற்பத்தியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதிக்கான RoDTEP மற்றும் RoSCTL திட்டங்களுக்கு முறையே 5.8% மற்றும் 10% நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதையும் சைமா தலைவர் வரவேற்றுள்ளார். புதிய பணியாளர்களுக்கு EPFO பங்களிப்பை மாதம் ரூ.3000 வரை இரண்டு ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கும் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டத்தையும், அனைத்து முறைசார்ந்த துறைகளிலும் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு மூன்று தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு அறிவிப்புகள் லாஜிஸ்டிக் மற்றும் பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்து உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விவசாயத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பருத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும், இதனால் பருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஜவுளித் துறை பயனடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முத்ரா கடன்களின் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது சிறு வணிகர்கள், கைத்தறி மற்றும் மின்தறி நெசவாளர்களுக்கு பயனளிக்கும் என்று SIMA தலைவர் கூறியுள்ளார். மேலும், 12 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, PPP முறையில் வாடகை வீடுகள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவை ஜவுளித் துறைக்கு பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் பாதுகாப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான அறிவிப்புகள், TUF திட்டம், திறன் மேம்பாடு, PLI, NTTM மற்றும் PM-MITRA பூங்கா ஆகியவற்றிற்கான வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை ஜவுளித் துறையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று SIMA தலைவர் டாக்டர் எஸ்.கே. சுந்தரராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...