உடுமலை அருகே குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சிக்கு திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வழங்கல் துறையிடம் பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலை-திருப்பூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, குடிமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக இன்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை-திருப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...