தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முத்து கவுண்டன் பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கான இந்த முகாம் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இலா. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முகாம் அமைத்தன. இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு அலுவலகமாக செல்லாமல் ஒரே இடத்தில் தங்கள் குறைகளை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்த போது, பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் நேரடியாக பேசி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...