கோவை: வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டு பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதியில் உள்ள அமுதம் நியாய விலை கடை (எண்.26) இன்று (ஜூலை 22) வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பொதுமக்களிடம் பொருட்கள் சரியாக கிடைக்கின்றதா என்று கேட்டறிந்தார்.



அதே வார்டின் பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி 3, ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று (ஜூலை 22) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியையும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் குப்பைகளை சாக்கடைக்குள் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...